உயிருக்குள் உறைந்தது எழுந்து வழியுதே
உனைதனைப் பார்த்ததும் எழுதச் சொல்லுதே
சிறு சிறு கணத்திலும் வாழ்க்கை இனிக்குதே
சிறகில்லா மனம் கூட வானைத்தாண்டுதே
தொலைவினில் பார்த்ததும் என் முகம் மலர்ந்தது
தொல்லைகள் துயரங்கள் எங்கோ தொலைந்தது
விழிகளில் இமையோ இசையாய் துடிக்குது
வித விதமாய் பல கனவுகள் பிறக்குது
உதடுகள் என்றும் உன் பெயர் சொல்லுதே
உறக்கத்தில் கூட உன்னை அழைக்குதே
குறுகுறுப்பார்வைகள் என்னுயிர் கொல்லுதே
கூட்டத்தில் உன்னை என் மனம் தேடுதே
உன் குரல் கேட்கையில் உயிரில் ராகங்கள்
உன்னுடல் தீண்டலில் உருகும் பாடல்கள்
உன்னெதிரே வருகையில் உலகம் என் கையில்
உருவம் இல்லா இந்த உணர்வுதான் என்னவோ ?