dimanche 11 novembre 2007

யாரவன் ?


இயல்பாய் பேசிக்கொண்டிருக்கையில்
இடையில் ஒரு சலனம்
யாரவன் ?
எங்கேயோ இருந்து கொண்டு
எனக்கின்பம் அளிப்பவன்
ஏதோ துணையாய் கிடக்க
அதன் மேல் சாய்ந்தேன் ஆதரவு தேடி
கண்கள் விழித்தே இருந்தும்
கனவு காணத்தொடங்கினேன்
கற்பனை கலந்த கனவு அது!
ஏதேதோ ஆசைகள் வந்து அலைமோத
ஆழ்ந்த சிந்தனையிலும்
என் உதட்டில் ஓர் புன் சிரிப்பு
முகம் தெரியாதவனுக்காய்
முழுதாக உறைந்திருந்தேன்

1 commentaires:

a dit…

யாரவன்?
செரியான கெல்வி தான்... ஆனால் நிச்சயமா எனக்கு பதில் தெரியாது... கவிதை நல்லா இருக்கு என்டு மட்டும் தெரியும்