mardi 23 octobre 2007

டேய் பையா

ஆரம்பத்தில எங்களைப் பார்க்க வந்திருக்கும் புதிய பூவென்று தான் உன்னை நினைச்சோம்

உன் சின்ன விழிகள் எங்களை கூர்ந்து பர்த்தது இன்னமும் நினைவிருக்கு



உன் பிஞ்சு கையில் சிக்கித்தவித்த எம் ஒற்றைவிரல்


உன் இமைகளின் ஒவ்வொரு அசைவும்


தூக்கத்தில் கூட எம்மை கொள்ளை கொண்ட உன் குறுஞ்சிரிப்பு


எத்தனை தடவை கண்கொட்டாமல் பார்த்திருப்போம்


நீதானே என்று தாங்கிகொண்ட உன் சின்னச் சின்ன குறும்புகள்


உன் மாற்றங்களை எப்படி எப்படியோ ரசித்தோம்


உன் முதல் பார்வை


முதல் தீண்டல்


முதல் சிரிப்பு


முதல் அழுகை



முதல் அடிவைத்த பாதங்கள்



முதல் முத்தம்


முதல் வார்த்தை
"அம்மா"
எத்தனயோ தடவை ஏங்க வைத்தாய்
சிரிக்க வைத்தாய்
டேய் பையா உனக்கு 60 ஆனலும்கூட
எமக்கு நீ இன்னமும் செல்ல குழந்தைதான்
உன்னோடிருப்பதே எமக்கு உலகமாய் போய்விட்டது

2 commentaires:

a dit…

அட அட அடா, அருமை அருமை

a dit…

நல்ல கவிதை...
குழந்தைகளின் புகைப்படங்கள் மிகவும் அருமை ..

என்றும்
இனிய தோழன்
விஷ்ணு