ஆரம்பத்தில எங்களைப் பார்க்க வந்திருக்கும் புதிய பூவென்று தான் உன்னை நினைச்சோம்

உன் சின்ன விழிகள் எங்களை கூர்ந்து பர்த்தது இன்னமும் நினைவிருக்கு

உன் பிஞ்சு கையில் சிக்கித்தவித்த எம் ஒற்றைவிரல்

உன் இமைகளின் ஒவ்வொரு அசைவும்

தூக்கத்தில் கூட எம்மை கொள்ளை கொண்ட உன் குறுஞ்சிரிப்பு

எத்தனை தடவை கண்கொட்டாமல் பார்த்திருப்போம்

நீதானே என்று தாங்கிகொண்ட உன் சின்னச் சின்ன குறும்புகள்

உன் மாற்றங்களை எப்படி எப்படியோ ரசித்தோம்
உன் முதல் பார்வை

முதல் தீண்டல்

முதல் சிரிப்பு

முதல் அழுகை

முதல் அடிவைத்த பாதங்கள்

முதல் முத்தம்

முதல் வார்த்தை
"அம்மா"
எத்தனயோ தடவை ஏங்க வைத்தாய்
சிரிக்க வைத்தாய்
டேய் பையா உனக்கு 60 ஆனலும்கூட
எமக்கு நீ இன்னமும் செல்ல குழந்தைதான்
உன்னோடிருப்பதே எமக்கு உலகமாய் போய்விட்டது
"அம்மா"
எத்தனயோ தடவை ஏங்க வைத்தாய்
சிரிக்க வைத்தாய்
டேய் பையா உனக்கு 60 ஆனலும்கூட
எமக்கு நீ இன்னமும் செல்ல குழந்தைதான்
உன்னோடிருப்பதே எமக்கு உலகமாய் போய்விட்டது


2 commentaires:
அட அட அடா, அருமை அருமை
நல்ல கவிதை...
குழந்தைகளின் புகைப்படங்கள் மிகவும் அருமை ..
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு
Enregistrer un commentaire