dimanche 20 avril 2008

நீ போன (சு)வடு!


கண்ணீர்த்துளிகள் மட்டும் என்னை வாழ வைக்குமா
காணும் கனவுகளே என்னை இனிமையாக்குமா

உன் நினைவுகள் மட்டும் நெருங்கிய சொந்தமாய்
நித்தமும் என்னை வாட்டுது
உன் சிரிப்புக்களும் கூர்ப்பார்வைகளும்
ஏன் ஊற்றாய் நுழைந்து உயிர் சிதைக்குது

என் தூக்கம் எங்கோ தொலைந்துபோக...
உன் முகமும் என்னை முழுசாய் ஆள...
நீ மீண்டும் வருவாயா? சொல்லு
ஒவ்வொரு காலையும் உனக்காய் விடியுது
ஒவ்வொரு மாலையும் உன்னைத் தேடுதே...

என் காதலை நம்பியே...
நானும் நிஜமாய் இருந்தேன்...
உன்னை நிழலாய்த் தொடர்ந்தேன்

என் உணர்வுகள் இங்கு மூடவில்லை,
உணர்ச்சிகளும் சாகவில்லை

நீயிங்கு இல்லாமல், நான் ஏனோ தனியாக...


என் வாழ்வில் ஏன் இந்தக் காயம் தந்தாய் ?
என் காதலில் ஏன் இந்த வலியைத் தந்தாய் ?
சொல்லேன்

நீ என்னை விரும்பவில்லையா ?
என் காதல் உண்மையில்லையா?

உன்னை நான் மறக்கவா இல்லை... வெறுக்கவா

ஒவ்வொரு நாட்களும் புதுப்புது வேதனை,
நான் என்ன செய்ய?

என்னையேன் தனியே விட்டு விலகிச் செல்கிறாய்
இதயம் அறுந்த காதல் இங்கு வாழுமா
நாட்கள் நகரவே விலகி ஓடுமா..சாகுமா

உந்தன் வார்த்தை என்னை நோகடித்து சாகடிக்க
நான் என்ன செய்தேன் காதல் வந்து தீயை மூட்ட
நீ போன வடு மாறுமா, ...இதயம் வலிக்கின்றதே
என் காதல் இன்னும் காத்திருக்கவா,
இல்லை காற்றில் மறையவா..
சொல்லேன்


உன் மூச்சின் வெப்பம் சேராமல் என்னுயிரும் வாழாது
உன் பார்வை வீசாமல் என் உடலும் தேறாது
நாட்கள் மெல்ல நகர நகர
நானும் உன்னைத் தொலைப்பேனோ

நானும் உன்னை விரும்ப விரும்ப
நீயும் என்னை வெறுப்பாயோ


இந்த அழகிய காதல் என்னை அவஸ்தைக்குள்ளாக்கியதே
அந்த அறியா வார்த்தைகளோ என் இதயம் கீறியதே

என் காதல் தனியாக ...அதற்குள் நான் கைதியாக...

"கசப்பான" உண்மை




















மீண்டும் நீ சொன்னதை நினைவு படுத்துகிறேன்
உனக்கு உண்மையாய் பட்ட வார்த்தைகள் மட்டும்...
என்னை ஏன் பாதித்தது?
எதையுமே ஒளித்துவைக்காமல்...
சட்டென்று நீ கூறிய வார்த்தைகள்
என்னை ஓரிரு நிமிடங்கள் அறைந்தது தெரியுமா?
வேண்டாம்!
தெரிந்திருந்தால் நீயே உன்னை நொந்து கொள்வாய்...
ஏதேதோ கஷ்டங்களால் உடைந்து போன
உந்தன் மனது...

அதனால் வந்த வெள்ளை மனது...
உனக்கே தெரியாமல் என்னை சிறிதாய் கீறினாலும்...
நீ மாறாமல் இரு
ஏனெனில் உன்னை நட்பாக ஏற்றதே
உன் தூய்மையான மனம் கண்டு!
உண்மை வலித்தாலும்...
உடனே ஏற்றுக்கொள்வேன்

நட்போடு
தயா