samedi 26 janvier 2008

கனவில் அவன்


ஒவ்வொரு காலையும் விழிக்கும் போது
நான் தொலைத்தது
என் கனவை மட்டுமல்ல
அதில் வாழும் உன்னையும் தான்!

-------------------------------

சீக்கிரமாக உறங்குகிறேன்
நேற்றிரவு நீ வந்த கனவு
இன்றும் தொடராதா என்று!

இது ஞாயமா?


நீ தூங்குவதை ரசிப்பதற்காக
என் தூக்கத்தை கலைத்தாயே
இது ஞாயமா?

முதல் கவி

உன்னில் தோன்றியவையை
எழுத்தில் வடி
எனக்காய் நீயிட்ட ஆணை இது
அதனால் தோன்றியது
என் முதல் கவி !

mercredi 23 janvier 2008

நேசித்தது

நான் நேசித்தது உன்னை மட்டுமல்ல...
உன் வீட்டு நாய்க்குட்டியையும் தான்!

வாழ்த்து அட்டைகள்


எத்தனையோ நாட்கள் கடந்தும்
உனக்காய் எழுதிய வாழ்த்து அட்டைகள்
இன்னும் என்னிடத்தில் தான்...

நீ ஒருவன்

நான் வியந்த மனிதரில் நீயும் ஒருவன்
அன்பானவனாய்...
அழகானவனாய்...
துணையானவனாய்...
என்னவனாய்...
நண்பனாய்...!!!

மோதல்


இரவிரவாய்
எனக்கும் என் பேனாவுக்கும் மோதல்
யார் உன்னை அதிகம் நினைப்பது என்று