mercredi 7 mai 2008

நான்‍‍கள் (குறும்படம்)


பிரான்ஸில், நல்லூர் ஸ்தான் கலைப்பிரிவு நடத்திய உலகளாவியரீதியிலான குறும்ப்படப்போட்டியில் முதாலம் பரிசு பெற்ற குறும்படம் இது! மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் இந்தப் போட்டியில், இவ்வாண்டு மொத்தம் எட்டு குறும்படங்கள் இடம்பெற்றன! அதில் முதலாவது பரிசு பெற்ற "நான்கள்" குறும்படம் உங்கள் பார்வைக்காக!



நடிப்பு : அஜிந்தாஸ், சதாபிரணவன், ரமணா, றஜிந், கீதன்...

இசைக்கோர்வை : விக்ரம்

ஒளிப்பதிவு/படத்தொகுப்பு: டெசுபன்

தயரிப்பு : ற‌ஜிந்

எண்ணம்/ஆக்கம் : சதாபிரணவன்


இக் குறும்படப் போட்டியின் முழு விவரணத்தையும் பார்க்க இங்கே அழுத்தவும்

( நன்றி desu2.skyrock)

samedi 3 mai 2008

நான் செய்த‌ க்ளிக்(ஸ்)















jeudi 1 mai 2008

கனவோ...இது நினைவோ

















கனவோ...இது நினைவோ
குழம்பினேன் நானே

நிழலோ இல்லை நிஜமோ
தொலைந்ததும் நானே

அவன் வந்தது...நான் பார்த்தது...
அவன் சிரித்தது...நான் ரசித்தது...
உண்மையா...அட இல்லையா?

யார் தான் வந்து கண்ணின் முன்னே காதல் கோலம் போட்டது
ஏன் தான் எந்தன் இதயம் இன்று இசையாய் மெல்லத் துடிக்குது

வானில் கூட சேர்ந்தே நடக்க மேகம் ஒன்று அழைத்தது
நேரில் நானும் அவனைப் பார்க்க நெஞ்சம் ஏதோ செய்தது

அவன் சொன்னது...நான் கேட்டது...
அவன் தந்தது...நான் பெற்றது...
உண்மையா... அது உண்மையா?

காதில் சொன்ன வார்த்தை ஏனோ பாதி தானே கேட்டது
மீதி கேட்க..மீண்டும் கேட்க ஏனோ மனதும் ஏங்குது

முத்தம் தந்த தடையம் கூட முகத்தைப் பார்த்துச் சிரிக்குது
மூச்சில் சேர்ந்த வெப்பம் என்னை மூர்ச்சையாக்கி விட்டது

நிலவோடு பிறந்தவள்




















நிலவோடு பிறந்தவள் இவளோ...
நினைவினிலே வாழ்பவள் இவளோ...
அழகான ரோஜா இவளோ...

அதிலுள்ள தேனும் இவளோ...


குறுகுறுன்னு எனைப் பார்த்து...
குழந்தையென மாற்றியே விட்டாய்

துறுதுறுன்னு நடந்தே விழுந்து...
தோள்களிலே சாய்ந்தே அழுவாய்

கதையென்று சொல்லிவிட்டு கண்கள் மூடித் தூங்குகின்றாய்

அதை நானும் நிறுத்திடும் போது அடுத்த கணமே விழித்திடுகின்றாய் (x2)


என்னடி என்னடி நான் பாவம்...

என்னுயிர் கொல்லுது உன் கோபம்!

(நிலவோடு)


இரவிரவாய் உனை நானும்...
இமைக்காமல் பார்த்து இருப்பேன்
இடையிடையே பூப்பூக்கும்...
இதழ்களை நான் ர‌சித்தே இருப்பேன்

கதையென்று சொல்லிவிட்டு கண்கள் மூடித் தூங்குகின்றாய்
அதை நானும் நிறுத்திடும் போது அடுத்த கணமே விழித்திடுகின்றாய் (x2)


என்னடி என்னடி நான் பாவம்...

என்னுயிர் கொல்லுது உன் கோபம்!