vendredi 19 octobre 2007

வந்துவிடு


மறந்து விடு
என்னையும் உன்னையும் தவிர
உலகத்தில் அனைத்தையும் மறந்து விடு
ஒரு துளி நிமிடங்கள்
உனக்காக நானும்
எனக்காக நீயும்
வாழ்ந்தாவது சாவோம்
பாரமான இதயத்திற்கு
விடுமுறை நீயும் கொடுத்து விடு
இயல்பாக என்னை
இன்றாவது நெருங்கி விடு
எத்தனையோ காலங்கள்
இந்த நிமிடத்திற்காய்
காத்திருந்தேன்
எதிர்பார்த்திருந்தேன்
இப்பொழுது மட்டும்
எனக்கே எனக்காய் வாழ்ந்திடேன்!

3 commentaires:

a dit…

தயா உங்கள் வந்துவிடு கவிதை அருமை...

வாழ்த்துக்கள்

a dit…

கவிதை அருமை தயா

Anonyme a dit…

sisi nalla irukuuuuuuuuu lusu va felicitation