dimanche 25 février 2007

அஹா அதிகாலை!!!

அது ஓர் சுகம்...
நேரம் ஆகிவிட்டது என்று கடிகாரம் அலறினாலும்
என்னுடன் பிறந்தவன் அழைப்பில் எழும்புவதில் ...


எழுந்திரு எழுந்திரு எனும் கடிகாரத்தின் இம்சைக்கும்
படுத்திரு படுத்திரு எனும் மெத்தையின் கதகதப்பிலும்
மாட்டிக்கொண்டு தவிக்கும் மனசைப் பார்க்கையில்...



ஒப்பனை அற்ற முகத்தை கண்ணாடியில் பார்த்துவிட்டு
என் கண்கள் அகல விரிந்து
ரசிக்குமே...


"ஜில்" என்று தண்ணீர்த்துளிகள்கண்மணித்துளிகளுடன் சந்திக்கும் அந்த நொடி தோன்றுமே ...


பனிக்காலத்தில் பள்ளி போய் சேர பேருந்தை நோக்கிப் பயணிக்கும் நம் கால்கள் போடும் தாளங்கள் ...


கதிரவன் எட்டிப்ப்பார்க்க தாய் புறா தன் குஞ்சுகளுக்கு இரை தேடி அலைய
குளிர் காற்று நம் இதயதை தொட்டுப்போக
அந்தரத்தில் தொன்கி துள்ளிகுதிக்குமே நம் மனசு...


பேருந்து ஜன்னல் அருகில் நண்பனின் அரட்டை
காது வரை நுளைய நம் உதட்டில் பூக்குமே
முதல் மலர்...


எங்கோ கற்றில் தவந்து வரும் கீதம்
நம் காதுகளுக்கு விருந்தாகி, நம் மனதில் படர்ந்து
இதயத்தை இதப்படுதுமே அக்கணம்...

0 commentaires: