dimanche 25 février 2007

இன்றாவது உனைக் காண்பேன்




என் தோழி வந்து உன் வருகை சொன்னதும்
நான் என்னவானேன் அக்கணத்தில் ஏதோ ஆனேன்...
என் மனசு யாவும் மழை தான் பொழிந்து
அணுக்கள் முழுதும் பசுமை ஆகின!
அந்தப் பொன்மாலைப் பொழுதில்
உனைக் கண்கள் தேடின!
காணவில்லையென்றதும்
துடிக்கத்தொடங்கின
-மறுபடியும்
வானம் வெளிக்குமே!
மனசு பதைக்குமே!
இன்றாவது உனைக் காண்பேன் என்று!!!

0 commentaires: