jeudi 1 mai 2008

கனவோ...இது நினைவோ

















கனவோ...இது நினைவோ
குழம்பினேன் நானே

நிழலோ இல்லை நிஜமோ
தொலைந்ததும் நானே

அவன் வந்தது...நான் பார்த்தது...
அவன் சிரித்தது...நான் ரசித்தது...
உண்மையா...அட இல்லையா?

யார் தான் வந்து கண்ணின் முன்னே காதல் கோலம் போட்டது
ஏன் தான் எந்தன் இதயம் இன்று இசையாய் மெல்லத் துடிக்குது

வானில் கூட சேர்ந்தே நடக்க மேகம் ஒன்று அழைத்தது
நேரில் நானும் அவனைப் பார்க்க நெஞ்சம் ஏதோ செய்தது

அவன் சொன்னது...நான் கேட்டது...
அவன் தந்தது...நான் பெற்றது...
உண்மையா... அது உண்மையா?

காதில் சொன்ன வார்த்தை ஏனோ பாதி தானே கேட்டது
மீதி கேட்க..மீண்டும் கேட்க ஏனோ மனதும் ஏங்குது

முத்தம் தந்த தடையம் கூட முகத்தைப் பார்த்துச் சிரிக்குது
மூச்சில் சேர்ந்த வெப்பம் என்னை மூர்ச்சையாக்கி விட்டது

1 commentaires:

Anonyme a dit…

ஆமா இது கனவா இல்லை நினைவா,
நான் கூட உன்னிடம் இனையே கேக்கிறேன்!!
என்ன ஆச்சு இப்படி காதல் மலை பொழிகிறாய்?