jeudi 1 mai 2008

நிலவோடு பிறந்தவள்




















நிலவோடு பிறந்தவள் இவளோ...
நினைவினிலே வாழ்பவள் இவளோ...
அழகான ரோஜா இவளோ...

அதிலுள்ள தேனும் இவளோ...


குறுகுறுன்னு எனைப் பார்த்து...
குழந்தையென மாற்றியே விட்டாய்

துறுதுறுன்னு நடந்தே விழுந்து...
தோள்களிலே சாய்ந்தே அழுவாய்

கதையென்று சொல்லிவிட்டு கண்கள் மூடித் தூங்குகின்றாய்

அதை நானும் நிறுத்திடும் போது அடுத்த கணமே விழித்திடுகின்றாய் (x2)


என்னடி என்னடி நான் பாவம்...

என்னுயிர் கொல்லுது உன் கோபம்!

(நிலவோடு)


இரவிரவாய் உனை நானும்...
இமைக்காமல் பார்த்து இருப்பேன்
இடையிடையே பூப்பூக்கும்...
இதழ்களை நான் ர‌சித்தே இருப்பேன்

கதையென்று சொல்லிவிட்டு கண்கள் மூடித் தூங்குகின்றாய்
அதை நானும் நிறுத்திடும் போது அடுத்த கணமே விழித்திடுகின்றாய் (x2)


என்னடி என்னடி நான் பாவம்...

என்னுயிர் கொல்லுது உன் கோபம்!

0 commentaires: